தமிழகத்தின் பெனுகொண்டா – கடலாடி | பகுதி – 2

1363

ஆரிய வைசியர் வரலாறு – சிறப்புப் பதிவு 2

தெய்வங்களின் திருவடிகள் தீண்டப்பெற்ற கடலாடியின் பெயர்க்காரணத்திற்கான புராண வரலாறுகளை பற்றி கண்டு வருகிறோம்!

ஆரிய வைசியர் வரலாறு – சிறப்புப் பதிவு 1

சிவபெருமானின் பாதம்

எல்லோர்க்கும் இறைவனான சிவபெருமான் இவ்வூரின் அருகிலுள்ள பருவதமலையில் பிரம்மராம்பிகை சமேத மல்லிகார்ஜீனராக கோயில் கொண்டுள்ளார்.

பருவதம் என்றால் மலை அதாவது மலைகளுக்கெல்லாம் மலை இன்னும் விளக்கமாக சொன்னால் மலைகளுக்கெல்லாம் அரசன் என்று பருவதமலையின் பெயர்க்குறிப்பு விளக்கம் பற்றி சங்ககால நூலான மலைபடுகடாம் இந்த மலையின் பெயர்க்காரணம் பற்றி கூறுகிறது.

கடலாடியில் கால்தடம் பதித்த பின்னரே பருவதமலையில் சிவபெருமான் கோயில் கொண்டார் என புராண வரலாறுகள் கூறுகின்றன.

கொல்லிமலை, சதுரகிரிமலை என சித்தர்கள் வாழும் மலைகளின் வரிசையில் போற்றப்படுகின்ற மலை பருவதமலை. சிவபெருமான் இவ்விடத்தில் கால்தடம் பதித்து சென்றதால் சித்தர் பெருமக்களும் சிவனின் காலடியை இங்கு வணங்கிய பின்னரே பருவதமலை செல்வதாக ஐதீகம்.. ஆக சிவபெருமான் மற்றும் அவரை வணங்கும் சித்தர்பெருமக்களின் கால்தடமும் பதிந்து புண்ணியம் பெற்ற தலமே கடலாடி.

பருவதமலையில் உள்ள சித்த மூலிகைகளின் வாசமும், பருவதமலையில் உள்ள மல்லிகார்ஜீன சிவபெருமானின் அருட்பார்வையும் கடலாடி ஊரை நோக்கியே அமைந்துள்ளது மற்றொரு சிறப்பு.

காமாட்சியின் & முருகனின் திருப்பாதம்

இத்தலம் காஞ்சிபுரம் காமாட்சி அம்மனின் வரலாற்றோடு தொடர்புடையது. அந்த வரலாற்றை காண்போம், ஒரு சாபத்தின் காரணமாக பூவுலகில் மாங்காடு வந்து சிவனை நோக்கி தவம் செய்து கொண்டிருக்கிறார் பார்வதி அன்னை.

இறைவன் பிரதியட்சமாகி காஞ்சிபுரம் வந்து தவம் மேற்கொள்ள சொன்னார். அங்கே காஞ்சிபுரத்தில் திருவண்ணாமலை வந்து தவம்புரிந்து எனை அடைவாய் என மலர்ந்தார். அப்படி காஞ்சிபுரத்தில் இருந்து திருவண்ணாமலை நோக்கி செல்லும் வழியில் பார்வதி அன்னைக்கு தாகம் எடுத்ததால் மகன் முருகனை அழைத்தாள் அன்னை.

அன்னையின் நினைத்த மாத்திரத்தில் அன்னையின் திருவடி தொழுது பார்வதி அன்னையின் எண்ணத்தை உணர்ந்து அருகிலிருந்த ஜவ்வாது மலையை நோக்கி வேலெறிந்தார்.

முருகப்பெருமான் எறிந்த வேலின் வினைப்பயன் என்ன?? – அடுத்த பதிவில்! Stay Tuned!!

Kannikadhanam.com – Trusted Aryavysya Matrimony Website | WhatsApp your Horoscope here to Register: https://wa.me/+919944917638

Author – பென்னாகரம் திரு. பாலா வெங்கட்ராமன்

VYSDOM for Aryavysyas இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

Click here and Join on Vysdom for Aryavysyas Facebook Group