தமிழகத்தின் பெனுகொண்டா – கடலாடி | பகுதி 1

2024

ஆரிய வைசியர் வரலாறு – சிறப்புப்பதிவு 1

எந்த ஒரு தெய்வகாரியமும், தெய்வ சங்கல்பம் இல்லாமல் அவனுடைய அனுக்கிரஹம் இல்லாமல் நடைபெறுவதில்லை!!!. பலமுறை நான் சிந்தித்தது உண்டு சிறுநகரத்தில் இவ்வளவு பொருட்செலவில் வாசவி ஆலயம் தேவையா என?? ஆனால் அதில் தெய்வ சங்கல்பம் உள்ளதின் அவசியத்தை பலபேர் அறிய மாட்டார்கள். ஆம் அன்னையின் அனுக்கிரஹம் இவ்விடத்தில் இல்லாமல் அன்னை இங்கு வர சம்மதித்து இருப்பாளா???

வாசவி அன்னையே இங்கு வர விருப்பம் அல்லது சங்கல்பம் கொள்ளும் அளவிற்கு இவ்விடத்தில் அப்படி என்ன இருக்கிறது?? வாருங்கள் கடலாடியின் புராணம் முதற்கொண்டு வரலாறுகளை பார்ப்போம்.

கடலாடி எனும் கடவுளின் அடி

கடலாடி எனும் ஊரிற்கான பெயர்க்காரணம் ஆராய்ந்தால் கடவுள் அடி எனும் பெயர் மருவி கடலாடி ஆனதாக புராண சான்றுகள் கூறுகின்றன..

அப்படி எந்த கடவுளின் அடி இங்கே இருக்கிறது என கேட்கிறீர்களா?? ஒன்றல்ல இரண்டல்ல மூன்று தெய்வங்களின் காலடிகள் மட்டுமல்லாமல் சித்தர்களின் காலடி தடங்களும் இங்கே பதிந்துள்ளன. என்னாச்சரியம் ஆம்…!!

  • சிவபெருமான்
  • காமாட்சி அன்னை
  • முருகப்பெருமான்

என மூன்று பெரும் தெய்வங்களின் காலடிகள் இங்கே பதிந்துள்ளன.. அதனால் தானோ என்னவோ கடவுள் அடி என பெயர் பெற்று பின்னர் இப்பகுதி கடலாடி என மாறியது.

கடலாடி – கடவுளின் அடியை தன்னுள் கொண்ட புண்ணிய தலம்

அது சரி சிவபெருமான், பார்வதி, முருகப்பெருமான் ஆகிய தெய்வங்களின் காலடிகள் இங்கே பதிந்துள்ள புராண வரலாறை பார்ப்போம்.

தமிழகத்தின் பெனுகொண்டா தொடரும் Stay Tuned!

Kannikadhanam.com – Trusted Aryavysya Matrimony Website | WhatsApp your Horoscope here to Register: https://wa.me/+919944917638

Author – பென்னாகரம் திரு. பாலா வெங்கட்ராமன்

VYSDOM for Aryavysyas இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

Click here and Join on Vysdom for Aryavysyas Facebook Group